×

சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் உலக சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி

நெல்லை, ஜூன் 14: உலக சைக்கிள் தினத்தையொட்டி சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் நெல்லையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நம் நாட்டின் 75வது சுதந்திர திருநாளின் அமுத பயணமாகவும், உலக சைக்கிள் தினத்தையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் விழிப்புணர்வு பேரணி தாழையூத்து சங்கர்நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், என்எஸ்எஸ் மாணவர்கள், தன்னார்வலர்கள் சார்பில் நெல்லையில் நடந்தது. தாழையூத்து சங்கர்நகரில் உள்ள சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து தச்சநல்லூர் மகாத்மா காந்தி சிலை வரை சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு நடந்த இப்பேரணியை நிர்வாக அலுவலர் னிவாசன் துவக்கிவைத்தார். இதில் கல்லூரியின் இயந்திரவியல் துறைத் தலைவர் செல்லப்பா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ- மாணவிகள் என திரளானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியனின் அறிவுரையின் பேரில் திட்ட அலுவலர்கள் செல்வராஜ், பாலமுருகன் செய்திருந்தனர். இதையொட்டி தாழையூத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் உலக சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : World Bicycle Day ,Shankar Polytechnic College ,Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...